ஆரோக்கியம் தரும் சோளம்

சில நேரங்களில் வேண்டாம் என ஒதுக்கும் சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது.சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும்.
இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன.
சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.
சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன.
நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
எனினும் மூல நோயாளிகள் சோள உணவை தவிர்ப்பது நலம்.

மூக்கடைப்பு பிரச்சனையா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விடயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.
இதனால் பேசவும் முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.
வெண்ணீர் கலந்த உப்பு
தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும்.
இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
உப்பின் பயன்கள்
நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.
அரிசியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும்போது சிறிது உப்புத் தூளையும் கலந்துவிட்டால் புழு, பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.
துருப்பிடித்த சாமான்கள் மீது உப்பு தேய்ப்பின் துரு நீங்கி பளபளக்கும்.
வீட்டில் தரை கழுவும்போது, சிறிது உப்பையும் நீரில் கலந்து கழுவினால், காய்ந்த பிறகு தரையில் ஈக்கள் மொய்க்கும் தொல்லையிராது.


நீங்க எங்க இருக்கீங்க! உங்க நண்பரிடம் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்



glympse-ex_001Facebook Messenger, Gmail, Twitter மற்றும் பல சேவைகளினூடாக உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Glympse Express எனும் இந்த மொபைல் அப்பிளிக்கேஷன் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் மட்டுமே செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனின் கோப்பு அளவு 2.7MB ஆக காணப்படுகின்றது.

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும்.
இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை.
* ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள்.
* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
* இந்த வேப்பிலை நீரை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது துடைத்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.
இதனை முகத்தில் தடவ ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும், இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இது பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

விஷத்தை விரட்டி அடிக்கும் அருகம்புல்

புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
பொதுவாக செயற்கை பானங்களை உட்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு, இயற்கையின் வரப்பிரசாதங்கள் பற்றியும், அதன் மகத்துவங்கள் பற்றியும் தெரியாமல் உள்ளது.
இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம், கற்றாழை, வேப்பிலை மற்றும் துளசி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் அருகம்புல் என்பது விநாயக இறைவனுக்கு செலுத்துவது மட்டுமல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
* அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
* சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த வேர் மிகவும் சிறந்ததாகும்.
* உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் அரும்புல் ஒரு சிறந்த மருந்தாகம்
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் அருகம்புல் ஜூஸ் திறமையானது.
* அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
* தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.ஷ
அருகம்புல் ஜூஸ்அருகம்புல் ஜூஸ் தயாரிப்பதற்கு இளம்புல்லாக பார்த்து வாங்குவது அவசியம்.
இளம்புல்லை நன்றாகக் கழுவ வெறுமனே அரைத்து அப்படியே குடிக்கலாம். ருசியாக இருக்க வேண்டுமென்றால், அரைமூடி எலுமிச்சைச்சாறு கலக்கலாம்.
சுவையாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால்,
அருகம்புல்- அரை கப், மிளகு- 2, சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், சர்க்கரை- அரை டீஸ் பூன், எலுமிச்சைச்சாறு- அரை கப் ஆகியவற்றைக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம்.

முதுமையை தடுக்கும் கொய்யா பழம்

நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது, ஒரே ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது தெரியுமா?
மழைக்காலங்களில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களில் ஒன்று தான் கொய்யா பழம்.இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன, மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன.* மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.* கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.* இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.* இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.* கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.* இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.* கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.* இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.

உலகின் வேகம் கூடிய இணைய உலாவி

இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.