மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம். இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc ) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க, D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

எச்சரிக்கை! Kaspersky Internet Security பாவிப்பவர்களே உங்கள் கவனத்திற்கு

Kaspersky Internet Security ஊடாக அனைத்து இடங்களிலும் Cyber Attack அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல இணையத்தளங்களை பாவிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.
இதனால் தற்காலிகமாக Kaspersky Internet Security ஜ நிறுத்திவிடுங்கள், அவ் நிறுவனம் அதனை சரி செய்வதில் ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது.
கூகிள் முதற்கொண்டு Youtube வரையிலான அனைத்து இணையத்தளங்களுக்கு சென்றாலும் இப்பிரச்சனையை காணலாம்.
உங்கள் கவனத்திற்கு
 

வெயிலின் கொடுமையை சமாளிப்பதற்கு


வெயில் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடல் குளிர்ச்சியாகும். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
பாட்டில் குளிர்பானங்களில் ஆல்கஹால் கலந்து அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகளவு சிறுநீர் வெளியேற்றப்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து விடும்.
பாட்டில் குளிர்பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாஸ்பரிக் அசிட் இருப்பதால் செரிமான முறையில் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்துவதால், உடல் உண்மையான குளிர்ச்சியை அடையாது. இதன்மூலம் தோலில் உள்ள ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்படுவதோடு வெப்ப இழப்பை ஏற்படுத்தும்.
எளிதான, சத்தான, கொழுப்பு குறைவான உணவுகளை உண்பது சிறந்தது. முள்ளங்கி, வால் மிளகு, வெங்காயம், பூண்டு, பீட்ரூட், பைனாபிள், திராட்சை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
அதே போல் உலர்பழங்கள் சாப்பிடுவதையும் குறைத்து கொள்ள வேண்டும். தண்ணீரில் துளசி விதைகளை போட்டு, அந்நீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். பழம் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரை கலக்காத உடனடி பழச்சாறுகள், எலுமிச்சை பழச்சாறு, இளநீர், மோர் சேர்ப்பது நல்லது.
தர்பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதிக சூடான, உப்பான, காரமான உணவுகளை சாப்பிட கூடாது. இரண்டு முறை குளித்தல், சுத்தமான காட்டன் ஆடைகள் அணிவதன் மூலம் வெயிலின் உக்கிரத்தை சமாளிக்கலாம்.

புற்று நோய்​களைக் கட்டுப்படுத்​தும் சோயாபீன்ஸ்

உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை.
ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு(மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விண்டோஸ் 8ன் முந்தைய பதிப்பு வெளியீடு

இயங்குதளம், புதிய உலாவியின் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும்.
பின்னர் வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளியாகும். இவற்றிற்கான பின்னூட்டத் தகவல்களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற்கொள்ளவே இந்த வெளியீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் முதலில், இதன் அடிப்படையில் புரோகிராம் தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின் நுகர்வோருக்கான பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஜூன் மாதம், வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முழுமையான வெளியீட்டிற்கு முன், வேறு சில பதிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த தகவலை விண்டோஸ் பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஸினோப்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முழுமையான வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு, ஏறத்தாழ இறுதிப் பதிப்பு போலவே இருக்கும். எனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் கூறும் நிறை குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு, இயங்குதளம் சரி செய்யப்படும்.
இந்த பதிப்பு, நுகர்வோர் கருத்துக்களைப் பெறவே வெளியிடப்படும். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இன்டர்பேஸ் இடை முகத்திற்கு இரு வகைகளில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இதனை வரவேற்பவர்கள் ஒரு புறம் இருக்க, பெரும்பாலானவர்கள், கீ போர்டு மவுஸ் கொண்டு இயக்கப்படும் பழைய வகை ஸ்டார்ட் மெனு அடங்கிய திரைக் காட்சியையே விரும்புகின்றனர்.
புதிய இடைமுகம் டேப்ளட் பிசியில் உள்ளது போலவே இருக்கிறது. டெஸ்க்டாப் பெர்சனல் கணணி போல இல்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்கு, மக்கள் அளிக்க இருக்கும் பின்னூட்டுகள் மிகக் கவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது எல்லாம் சரியாக மைக்ரோசாப் எதிர் பார்ப்பது போலச் சென்றால், வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகலாம்.

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளம்

இன்றைய காலகட்டத்தில் இணையம் தான் உலகையே ஆட்டிப் படைக்கின்றது, இதில் சிறுவர்களுக்கான பல்வேறு இணையத்தளங்களும் இருக்கின்றன.
Whyville என்னும் இந்த தளம் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளமாக இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளலாம்.
மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையிலும் வழங்கப்படுகிறது. இச் சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும்.
அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்வது, பல விளையாட்டு அம்சங்கள் என உள்ளன.
இத்தளம் பாதுகாப்பான முறையில் ஒன்லைனில் பாவிக்கும் அடிப்படை விடயங்களை கற்றுத் தருகிறது.
இணையதள முகவரி

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.
இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து அவுஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர்.
அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்

 குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள்.
சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.
ஆமணக்கின் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.
சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும்.
இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.
ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.
ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம்.
சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

விக்கல் ஏன் வருகிறது? ஓர் அறிவியல் விளக்கம்

விக்கல் யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவர், இன்றளவும் அனைவரும் அதையே தான் நினைக்கிறார்கள்.
நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.
ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும் போது விக்கல் வரும். அளவுக்கு மீறி அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.
விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம். இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.
காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்.

CamVerce 1.90 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

கணணிப் புரட்சியானது இன்று அனைத்துத் துறைகளிலும் கால்தடம் பதித்திருக்கும் அதேவேளையில் கல்வித்துறையிலும் அளப்பெரிய பங்குவகித்து வருகின்றது.
இதெற்கென அன்றாடம் புதிது புதிதாக மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவற்றின் வரிசையில் தற்போது CamVerce எனும் மென்பொருளும் இணைந்துள்ளது.
இம்மென்பொருள் மூலம் கல்வி தொடர்பான மின் கையேடுகள் தயாரிக்க முடியமாக இருப்பதுடன் டெக்ஸ்டாப் தொழிற்பாடுகளை நேரடியாகப் பதிவு செய்து அவற்றினை தேவைக்கு ஏற்றாற்போல் எடிட்டிங் செய்யவும் முடியும்.
தவிர AVI, ASF, SWF, DOC, WMV, PPT ஆகிய கோப்பு வகைகளாக சேமித்துப் பயன்படுத்தவும் முடியும்.
தரவிறக்க சுட்டி

உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம்: ஆய்வுத் தகவல்

உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டின் கார்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் தெரியவந்த தகவல்கள், உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு ஆகியவை ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமைக்கும். நோய் தாக்குதல் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இத்தகைய பழக்கங்களை மேற்கொள்வது நோயின் தீவிரத்தை குறைக்கும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உரிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக செய்வதால் ஆஸ்துமா தீவிரத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
பொதுவாக ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உடற்பயிற்சி செய்ய தயங்குவார்கள். மூச்சு விடுவதில் சிரமம் உள்ள இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மூச்சு திணறல் அதிகரிக்கும் என்று நினைப்பதே இதற்கு காரணம்.
ஆனால் அது உண்மையில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தாத உடற்பயிற்சிகளை அவர்கள் செய்யலாம்.
இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் போகப்போக பழகி விடும். அப்போது ஆஸ்துமாவின் தீவிரம் குறையத் தொடங்குவதை அவர்கள் உணரலாம்.
உடலுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால், உடல் பருமன் போன்ற பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்தார்

பல் பிரச்னைக்கு சிறப்பான கவனம் தேவை: புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும்.
பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதற்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும்.
சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும். இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு.
பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட்.
இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.
தொடர்ந்து அணிவதால் தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.
இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வலியை தடுப்பதற்கான வழிமுறைகள்

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற விஷயம் வலி. குறிப்பாக பெண்களும் வயதானவர்களும் பல்வேறு வலிகளால் அவதிப்படுகிறார்கள்.
எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, திசுக்கள் தேய்வது, நீரிழிவு, தைராய்டு மாதிரி ஏதேனும் நோய் தாக்குவது, சூழ்நிலை போன்றவை தான் வலிக்கான காரணங்கள்.
வலி என்பது நாள்பட்ட வலியாக மாறினால், வாழ்க்கை முழுவதும் அதன் அவதியை அனுபவிக்க வேண்டி வரும். உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள் தீராத வலியால் அவதிப்படுகிறார்கள்.
அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 75 சதவிகிதத்தினருக்கு மன உளைச்சலும் கவனக்குறைவும் சேர்ந்து கொள்கிறது. 85 சதவிகிதம் பேர் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.
இத்தகைய வலியை எப்படித் தவிர்ப்பது?
சாதாரண வலியாக இருக்கும் போதே அதை சரியாகக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டால், அது நிரந்தர வலியாக உடம்பிலேயே தங்குவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம்.
சாதாரண வலியை உடனடியாகக் கவனிக்காததே, அது நாள்பட்ட வலியாக மாறுவதற்கான பிரதான காரணம். வலி வந்ததும் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அது உடலில் தங்கும் அபாயம் உண்டு.
நாள்பட்ட வலி என்பதே ஒரு நோய் தான். இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண சிகிச்சைகள் பலன் தராது. வலி நிவாரண மாத்திரைகளோ, சுய மருத்துவமோ உதவாது.
மாறாக வியாதியின் தீவிரம் தான் அதிகரிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் தான் தீர்வு. வலிக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது முதல் கட்டம்.
சதை வலி, மூட்டு வலி, முதுகு வலி, தலைவலி, நரம்பு வலி, புற்றுநோய் வலி என எல்லா வலிகளுக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன.
அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எந்தக் காரணத்தினால் வலி உண்டானதோ, அதைத் தவிர்க்க வேண்டும்.
உதாரணத்துக்கு நடந்தால் வலிக்கிறது என்றால் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியால் வலி என்றால் அதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருபோதும் சுய மருத்துவம் வேண்டாம். ஓய்வெடுத்தால் வலி சரியாகி விடும் என்கிற அலட்சியமும் வேண்டாம்.

சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட் (வீடியோ இணைப்பு

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது.
இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

இளமையாக வாழ உதவும் புதினாக் கீரை

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே தான் தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த நோய்கள்: அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும்.
உயிர்ச்சத்து ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும்.
பொன் போன்ற மேனி: சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.
நரைமுடி அகலும்: முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.
தாது விருத்தியாகும்: அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
வாத சம்பந்தமான வியாதியை தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.
எலும்பு வளர்ச்சி: புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும்.
புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாகும்: மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சைகள்

பாம்பு கடித்து சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டால், உடனே மயங்கி விழுவதுண்டு, சில சமயம் இறக்கவும் நேரிடும்.
இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம், இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.
விஷத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை காப்பாற்றுவதற்கு,
கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்து விட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம்.
மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.
தலை முடியை பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம்.
தும்பை இலை - 10 கிராம்.
அகத்தி இலை - 10 கிராம்.
முருங்கை இலை - 10 கிராம்.
பெருங்காயம் - 10 கிராம். 
வசம்பு - 10 கிராம்.
உள்ளி - 10 கிராம்.
மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.
ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்.
கவுதும்பை வேர் - 30 கிராம்.
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்.
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.
நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்.
சிறியா நங்கை வேர் - 20 கிராம்.
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்.
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும்.
குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம்(மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.

உலாவியில் தவறாக அழித்த புக் மார்க் கோப்புகளை திரும்ப பெறுவதற்கு

இன்டர்நெட் உலாவியில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.
ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல் இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.
குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலாவியில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப் பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் உலாவியில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
புக்மார்க்குகளுக்கான பக் அப் கோப்பு சிறிய, மறைத்து வைக்கப்பட்ட கோப்பாக குரோம் உலாவியில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த கோப்பு அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.
பயர்பொக்ஸ் உலாவியில் இது மிக எளிது. பயர்பொக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. உலாவியும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பக் அப் செய்கிறது.
இந்த பக் அப் கோப்பை பல நாட்கள் பயர்பொக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப்பட்ட கோப்பறைகளை தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.
குரோம் உலாவியின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை. இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.
குரோம் உலாவி உங்கள் புக்மார்க் கோப்பினை ஒரே ஒரு பக் அப் கோப்பாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் உலாவியை இயக்கும் போதும் அது, அந்த பக் அப் கோப்பை மீண்டும் எழுதிக் கொள்கிறது.
எனவே புக்மார்க் கோப்பு உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் உலாவியை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பக் அப் கோப்புகள் புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.
C:UsersNAMEAppDataLocalGoogleChromeUser DataDefault இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் கோப்பு இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பக் அப் கோப்பு. நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.
இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு கோப்புகள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.
இந்தக் குழப்பத்தினை நீக்க, rganize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.
இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில் இறுதியாக உருவாக்கப்பட்ட பக் அப் கோப்பு அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பக் அப் கோப்பை மீட்டுக் கொண்டு வர, குரோம் உலாவியின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் உலாவி மூடப்பட்ட நிலையில், Bookmarks கோப்பை அழிக்கவும்.
Bookmarks.bak என்ற கோப்பை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் உலாவியை இயக்கினால், நீங்கள் அழித்த புக்மார்க் கோப்பை காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் உலாவியை திறந்து இயக்கிய போது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது

ஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு

ஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் விடயங்கள் அதன் History இல் காணப்படும்.
எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சில வேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு. இவை சிலருக்கு இடையூறாகக் காணப்படலாம்.
எனவே இவ் அரட்டைப் பகுதியில் உள்ள பழைய அரட்டைகளை எவ்வாறு தன்னிச்சையாகவே அழித்துக் கொள்ளும்படி வைக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் ஜிமெயிலில் Settings பகுதிக்கு செல்லவும், தற்போது தோன்றும் விண்டோவில் CHAT என்ற tab ஐ கிளிக் செய்து கொள்ளவும்.
தற்போது படத்தில் உள்ள My Chat history: என்பதில் இரண்டு Radio buttons காணப்படும். இதிலே Never Save Chat History என்பதை கொடுத்து இப்பக்கத்தின் கீழே உள்ள Save என்பதைக் கொடுத்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனிமேல் உங்கள் Chat History ஆனது தன்னிச்சையாகவே அழிக்கப்பட்டுவிடும்.

உலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள் எவை?

உலக மக்களை அச்சுறுத்தும் 2 கொடிய நோய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதில் ஒன்று நீரிழிவு, மற்றொன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் சராசரியாக 3 பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், நீரிழிவினால் 10 சதவீதம் பேரும் அவதிப்படுகிறார்கள் என்றும் புள்ளி விவரம் கூறுகிறது.
இதன்படி பார்த்தால் தற்போது உலக அளவில் ஏறத்தாழ 50 கோடி பேர்(12 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இதிலும் குறிப்பாக இருதய சம்பந்தப்பட்ட பாதிப்பு குறைந்த வருவாய் மற்றும் மத்திய வருவாய் உள்ள நாடுகளில் 40 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. 25 வயது இளைஞர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த கொடிய நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பரவலாக மருத்துவ வசதிகள், குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்வது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார கழக டைரக்டர் ஜெனரல் மார்க்கரெட் ஷான் தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் இணையத்தளங்களில் வைரஸ் பாதிப்பு: கூகுள் எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணையத்தளங்கள் வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
எனவே இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல் ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி கோப்புகளில் இருக்கலாம்.
இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கணணிகளில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் கோப்புகளிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.
இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கணணிகள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித்துள்ளது.
இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.
இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணையத்தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.
கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.
மொத்தமாக இணையத்தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர்கள், கூகுள் எச்சரிக்கையை மேற்கொண்டு சில நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு.
எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.

உங்களை பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு

இணையத்தை நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, உங்களை பின் தொடர்ந்து யார் வருகிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதை Real time tracking என்று சொல்வார்கள். பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை Collusion என்ற பயர்பொக்ஸ் உலாவி நீட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Collusionஐ பயர்பொக்ஸில் நிறுவிய பின்னர் தொடரும் இணையத்தளங்கள், அவற்றின் குக்கீஸ் போன்றவற்றின் விபரங்கள் மற்றும் எத்தளத்திற்கு செல்லும் போது அவை கணணிக்கு வந்தன என்பது பற்றிய விபரங்களை அழகாக கிராபிக்ஸ் வடிவில் தெரிவிக்கின்றது.
இதனை நிறுவிய பின்னர் அட் ஒன் பாரில் தெரியும் Collusion ஐகானை அழுத்தினால் மேற்கூறிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

புளுடூத் 4 தொழில்நுட்பம் குறித்த தகவல்கள்

வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில்நுட்பம்(Bluetooth Technology) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்தது. இருப்பினும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்களை இணைப்பதில் சிக்கல், கடவுச்சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில்நுட்பம் தீர்த்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் தகவல்களினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பற்றரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் ட்ரெட்மில் போன்ற தனி நபர் உடல் நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
இதற்கு அடுத்ததாக என்.எப்.சி எனப்படும் அண்மைக்கள தகவல் பரிமாற்றம்(Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில்நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
மடிக்கணணி, கைபேசி மற்றும் Router போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும்.
இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்களை இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Bluetooth Smart Ready

வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

கணணி பயனாளர்கள் அனைவருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயர்(VLC Media Player) பற்றி அறிந்திருப்பர். எளிமையான இந்த மென்பொருள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது.
தற்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.
இதற்கு முதலில் புதிய பதிப்பான VLC 2.0வை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும்.
அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 போர்மட்டில் My Documents->My Videos கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விட VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.
தரவிறக்க சுட்டி

சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்

இன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும்.
எனினும் சிறுவர்கள் இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.
Max Keylogger அம்சங்களாவன,
1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.
2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.
3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.
4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.
5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.
6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும்.
தரவிறக்க சுட்டி

ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.
இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.
இணையதள முகவரி

புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க

புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.
சிலவற்றின் போர்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.
படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப்படுவார்கள்.
இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் Image Splitter என்ற இணையத்தளம் செயல்படுகிறது.
இந்த தளத்திற்குச் சென்றவுடன் நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட கோப்பை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
கோப்பின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு தரவிறக்கம் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன்படுத்தலாம்.
இந்த தளத்தின் மூலம் jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய போர்மட்கள் கையாளப்படுகின்றன. போர்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட உங்களுக்கு எந்த போர்மட்டில் தேவையோ அந்த போர்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ அந்த அளவினை தந்தால் போதும்.
அளவுகளைத் தந்த பின் Resize image என்ற பட்டனில் கிளிக் செய்தால் அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில் நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால் அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.
மேலும் நாம் தரும் வரையறைகளின் படி ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல கோப்புகளாக இந்த தளம் தருகிறது. பட கோப்பு ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை(Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும்.
அதனை விரித்து பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.
இதற்குப் பதிலாக 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில் படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர் நமக்கு ஓகே என்றால் வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம்.
இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம். மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை.
புதிதாக கணக்கு எதனையும் திறக்க வேண்டியதில்லை. கடவுச்சொல் எதுவும் கிடையாது.
இணையதள முகவரி

தேவையில்லாத மின்னஞ்சல்களை தடை செய்வதற்கு

இணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
டட்மெயில், நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையத்தளங்கள் வேண்டாத மின்னஞ்சல்களில் இருந்தும், விளம்பர மின்னஞ்சல்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
இந்த வரிசையில் பவுன்சர் என்ற தளம் புதிதாக அறிமுகமாகி உள்ளது. மின்னஞ்சல்களை தடை செய்வதில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிற‌து.
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று மின்னஞ்சலை உருவாக்கித் தாராமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே மாற்றித் தருகிறது. அதாவது பிட்.லே போன்ற மின்னஞ்சல் சுருக்க சேவையை போல இதுவும் மின்னஞ்சல் முகவ‌ரியை சுருக்கி தருகிற‌து.
இதற்காக இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவ‌ரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது. தேவைப்பட்டால் இந்த முகவரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
அதன் பிறகு எந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரியை சம‌ர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
பதில் மின்னஞ்சல்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும். ஆனால் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாது. பாதுகாப்பாகவே இருக்கும்.
இந்த தளம் சுருக்கப்பட்ட மின்னஞ்சல் முகவ‌ரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
இணையதள முகவரி

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை மாற்றுவதற்கு

கைபேசியில் கமெரா வசதி இருப்பவர்கள் எளிதாக வீடியோ எடுக்கலாம். ஒரு சில நேரங்களில் கமெராவின் கோணங்களை மாற்றி அமைத்து வீடியோக்களை எடுத்து விடுவர்.
இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை கணணியில் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும்.
ஆனால் இதனை எளிதாக VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு மட்டும் Rotate செய்து பார்க்கலாம். இதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு X2X Free Video Flip and Rotate மற்றும் Free Video Flip and Rotate (DvdVideoSoft) என்ற மென்பொருள்கள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருள்கள் வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச் செய்து மாற்றம் செய்து தருகின்றன.
- rotate video 90 CW.
- rotate video 180.
- rotate video 90 CCW.
- flip video horizontal.
- flip video vertical.
- flip video vertical and rotate 90 CW.
- flip video vertical and rotate 90 CCW.
X2X Free Video Flip and Rotate: இந்த மென்பொருளின் மூலம் வீடியோக்களை உங்களது தேவையான அளவிற்கு வெட்டிக் கொள்ள முடியும்.
AVI, MPG, MPEG, MP4, WMV, ASF, MOV, QT, 3GP, 3G2, AMV, FLV போன்ற அனைத்து வகை வீடியோக்களையும் இந்த மென்பொருள் ஆதரிக்கிறது. மாற்றப்பட்ட வீடியோவை MP4 வகையில் கொடுக்கும்.
தரவிறக்க சுட்டி
Free Video Flip and Rotate(DvdVideoSoft): இந்த மென்பொருளின் மூலம் வேகமாக வீடியோ சுழற்றச் செய்யலாம். மேலும் இது நாம் கொடுக்கும் வீடியோவை அதே போர்மட்டில் தருகிறது.
தரவிறக்க சுட்டி

VLC 2.0.1-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

கணணி பயன்படுத்தும் நபர்கள் அனைவருக்கும் VLC Media Player பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அண்மையில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டது.
தற்போது இதன் புதிய பதிப்பான VLC 2.0.1-ல் மேலும் பல மீடியா கோப்புகளை சப்போர்ட் செய்யும் படி உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
முக்கியமாக ஆப்பிள் கணணிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர்.
தரவிறக்க சுட்டி

Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு

பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக  Zip, RAR வழியே இலகுவாக கணணியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும்  கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க பயர்பொக்ஸ் உலவியில் உள்ள இந்த நீட்சியை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் கோப்புகளை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேலும் ஓன்லைனில் இருந்த படி  Zip, RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக சோதித்து அறியலாம்.
தரவிறக்க சுட்டி

புதிய அம்சங்களுடன் கூடிய Adobe Photoshop CS6 Beta பதிப்பை தரவிறக்க

கணணி உபயோகப்படுத்துபவர்கள் அனைவருக்கும் Adobe Photoshop மென்பொருள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்.
தற்போது இதன் புதிய பதிப்பான CS6 Beta வெளிவந்துள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவும் போது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது, இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
இதற்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் வேலை செய்யாது.
தரவிறக்க சுட்டி

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க

பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:
1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி.
4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.
5. 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடுத்து கொள்ளலாம்.
6. உங்கள் புகைப்படங்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
7. புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
வழிமுறை:
1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.
5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்

புகைப்படங்களில் Slide Show உருவாக்குவதற்கு

நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.
ஆனால் சிறிய அளவில் நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில், வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தெரிவு செய்யவும். அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தெரிவு செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல் வேண்டுமோ அதனை தெரிவு செய்யுங்கள்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மொத்தம் ஆறு டேப்புகள் உள்ளன. புகைப்படத்திற்கு பெயர் கொண்டு வருவதில் இருந்து தேவையான எபெக்ட்களை நாம் எடுத்து வரலாம். Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்.
அனைத்தையும் செய்து முடித்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் உள்ளது.
தரவிறக்க சுட்டி

TuneUp Utilities 2011ஐ Licence Key உடன் தரவிறக்கம் செய்ய

கணணியினைப் பயன்படுத்தும் போது அதில் பல தேவையற்ற கோப்புக்கள், தற்காலிக கோப்புக்கள் என்பன நீக்கப்படாமல் காணப்படலாம். இதனால் கணணியின் வேகம் குறைவடையும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் விசேடமாக விண்டோஸ் இயங்குதளங்களிற்கு என அறிமுகப்படுத்தப்பட்ட TuneUp மென்பொருளானது அதிகளவானோரால் பயன்படுத்தப்படுகின்றது.
எனினும் முழுமையான செயற்பாட்டைக் கொண்ட இம்மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை. எனினும் 49.95 டொலர்கள் பெறுமதியான TuneUp Utilities 2011ஐ Licence Key உடன் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
1. இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை அழுத்தி தோன்றும் இணையப்பக்கத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரி, Captcha குறியீடு என்பவற்றை டைப்செய்து Product Key button என்பதை அழுத்தவும்.
2. தொடர்ந்து தோன்றும் பொப்பப் மெனுவில் மீண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப்செய்து தொடரவும்.
3. அதன்பின் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் Confirmation Linkஐ கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்குரிய  Personal Product Key ஐ பெற்றுக் கொள்ள முடியும்.

இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம்.
ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர்.
இவ்வாறு ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது.
இதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குரோமில் நிறுவிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து அந்த நீட்சியின் மீது க்ளிக் செய்தால் நீங்கள் எந்தெந்த தளத்தில் எவ்வளவு நேரத்தை செலவழித்தீர்கள் என்ற முழு பட்டியலும் உங்களுக்கு தளத்தின் முகவரியோடு சேர்ந்து வரும்.
Today என்பதில் இன்றைய அறிக்கையும் Total என்பதில் மொத்த செலவான நேரங்களையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து கொள்ளலாம்.