மிளகின் மருத்துவ பயன்கள்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.
இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது.
வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
* மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும்.
* மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.
* தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.
* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.
மிளகு அவல்
முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டு, பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், மிளகு அவல் உப்புமா ரெடி.

வயிற்றுப்போக்கு….இதயக்கோளாறு பிரச்சனையா?

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம்.
இவற்றில் இருந்து விடுபட, சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள்தான் பழங்களும், காய்கறிகளும்.
இதயம் மற்றும் உடல் உறுப்புகளைக் காக்க இதோ சில உணவு வகைகள்,
* விளாம்பழத்தில் இருந்து கல்லீரல் மற்றும் இதயக் கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. விளாம்பழம் வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.
வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுக்கும்போது விளாம்பழம் சாப்பிடலாம். அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும் நபர்கள் விளாம்பழத்தைச் சாப்பிட்டுவர அது சரியாகும்.
* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.
* மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.
* குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக்கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மி.லி. பசுவின் பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும். இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால் மார்பு வலி நீங்கி தேகத்துக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிள்களுக்கு இணையான சத்துகள் உள்ளன, இதனை 'ஜாம்' ஆகவும், லேகியமாகவும் செய்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முந்திரி பழம்

பழங்கள் வகைகளிலேயே, முந்திரி பழத்தில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இந்த பழத்தில் டானின் எனும் வேதிப்பொருள் இருப்பதால், பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.
இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.
பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது.
மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது.
இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.