உலாவியின் Sidebarல் யூடியூப் வீடியோக்களை பார்வையிடு​வதற்கு




வீடியோக்களைத் தரவேற்றம் செய்து அவற்றினை பயனர்கள் மத்தியில் கொண்டு செல்வதில், முன்னணியில் திகழும் இணையத்தளமான யூடியூப்பின் வீடியோக்களை உலாவியின் Sidebarல் பார்வையிடுவதற்கு நீட்சிகள் உதவுகின்றன.
கூகுள் குரோம், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளுக்கு தனித்தனியாகக் காணப்படும் குறித்த நீட்சிகளைத் தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பார்வையிடும் இணையத்தளங்களின் பக்கங்களை நிறுத்தாமல் அவற்றின் ஓரத்திலேயே யூடியூப் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடலாம்.

கூகுளின் ஓன்லைன் LEGO Builders அறிமுகம்


LEGO எனப்படும் குற்றிகளைப் பயன்படுத்தி உருவங்களை ஒன்லைனில் உருவாக்கும் புதிய முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பமானது கூகுள் குரோம் உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், நவீன இணையத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பரிமாண சூழலில் விரும்பிய பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவத்தினை பின்னர் நமது வசதிக்கேற்ப தனித்தனிப்படங்களாக மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த உருவத்தினை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இணையதள முகவரி

இணையத்தளங்​களிலிருந்து MP3 பாடல்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு

பல்வேறு இணையத்தளங்களிலும் காணப்படும் MP3 வடிவிலான பாடல்களைத் தரவிறக்கம் செய்வதற்கு குறித்த இணையப் பக்கத்திலேயே வசதி செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு இணையத்தளங்களை இனம்காண்பது கடினமாக இருக்கும் தருணங்களில் Music2PC எனும் இலவச மென்பொருளானது பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம் மென்பொருளின் உதவியுடன் 100 மில்லியன் வரையிலான வெவ்வேறு பாடல் கோப்புக்களை இணையத்தில் தேடித்தரவிறக்கும் வசதி காணப்படுகின்றது.
மேலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பாடல் கோப்புக்களையும் தரவிறக்கும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி

ஆப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.
ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது
சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது.
இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றி விடும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 10 உணவுகள்

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மால் நம்ம இயலாத 10 வகையான உணவு வகைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
1. தயிர்
தயிரிலிருந்து செய்யப்படும் Yogurt மிகவும் ஊட்டசத்து நிறைந்த உணவாகும். உடலை மெலிதாகவும், உணவு செரிமாணத்திற்கும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.


2. தானிய உணவு
தானியத்திருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, அரிசி கலந்த உணவு வகைகள் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டை தருகின்றது. உடலை சோர்விலிருந்து பாதுகாக்கின்றது.


3. பச்சை வண்ணக் காய்கறிகள்
பச்சை வண்ணக் காய்கறிகளான broccoli, Brussels sprouts, asparagus, peppers, and yellow beans ஆகியன நமது உடலுக்கு தேவையான பீட்டா காரோட்டீன், கால்சியம், மெக்னீசியம் A,C,K ஆகியவற்றை கொடுக்கின்றது.


4. ஆலிவ் எண்ணைய்
இவை நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க மற்றும் கலோரியை அதிகரிக்க உதவுகின்றது.


5. ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் வினிகரை தொடர்ந்து 12 வாரங்கள் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், தேவையான புரதசத்தையும் தருகின்றது.


6. தேயிலை டீ
நமது உடலை சுறுசுறுப்புடன் வைப்பதுடன் மேனி பளபளப்பிற்கும் உதவுகின்றது, புத்துணர்ச்சிய தருகின்றது.


7. ஆப்பிள்
மிகவும் சுவை நிறைந்த பழங்களில் ஒன்றாக ஆப்பிள் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வைக்கின்றது. மிகச்சிறந்த சிற்றுண்டியாகும்.


8. முட்டை
புரத சத்து நிறைந்த முட்டை மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகின்றது. பசியை குறைத்து தேவையான ஆரோக்கியத்தை தருகின்றது.


9. பாதாம்
மெக்னீசியம் அதிகம் கொண்ட இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.

10. சல்மான்(Salmon)
இந்த வகை மீன் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்தை தருகின்றது. மேலும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடலுக்கு தேவையான குளுக்கோசின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றது.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் துளசி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.
துளசி விதை ஆண்மையை அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வெண் தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப் பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

நம் கண்களால் எவ்வாறு நிறங்களை உணர முடிகிறது?

அறிவியல் வளர்ச்சியினால் இன்றைக்கு புதிதாக பல்வேறு நிறங்கள் உருவாகி உள்ளன. அனைத்து நிறங்களையும் நம் கண்களால் எப்படி உணர்ந்து கொள்ள முடிகின்றது?
நாம் பார்க்கும் பொருளில் என்ன நிறத்தில் உள்ளது என்று கண்களில் உள்ள உணர்வு செல்கள் தூண்டப்பட்டு மூளைக்கு தெரிவிக்கும்.
மூளை தான் நிறங்களை கண்டறிந்து சொல்லும், கண்களில் கூம்பு மற்றும் குச்சி வடிவில் ஒளியை உணரும் இரண்டு  உணர்வு செல்கள் உண்டு.
இந்த செல்கள் நரம்பு இழைகளோடு தொடர்பு கொண்டிருக்கும், இந்த நரம்பிழைகள் இணைந்து பார்வை நரம்பாக மாறி மூளையின் பார்வை கட்டுப்பாடு மையத்திற்கு செல்லும்.
குச்சி செல்கள், மங்கிய வெளிச்சத்தில் துல்லியமான பார்வைக்கு உதவும், கூம்பு வடிவச் செல்கள், பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கவும், நிறப்பார்வைக்கும் பயன்படும்.
கூம்பு வடிவ செல்களின் மூலம் சிவப்பு, பச்சை, நீலம் என 3 அடிப்படை நிறங்களை உணர முடியும். இந்த நிறங்களோட விகிதாச்சார கலவையால் தான் மற்ற வண்ணங்களை உணர முடிகிறது.

உங்கள் மூளையின் வயதை கண்டறிவதற்கு

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயது தானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது.
இந்த முகவரிக்கு சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி(விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும்.
முதலில் எளிதாக இருந்தாலும், போகப் போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன, அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
அடுத்த பிரிவு அடென்ஷன்(Recognition): இமேஜ் ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை முறை அது காட்டப்படுகிறது என்று சொல்ல வேண்டும். விளையாடிப் பார்க்கும் போதுதான், எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
அடுத்த பிரிவு மொழி(Anagrams): எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கில சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
எதிர்செயல்திறனைச் சோதிக்கிறது நான்காவது பிரிவு. இதில் ஆங்காங்கே ஸ்டார்கள் காட்டப்பட்டு மறையும். உங்கள் மவுஸ் கொண்டு அதில் கிளிக் செய்திட வேண்டும். எத்தனை ஸ்டார்களைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு. சோதிக்கப்படும் திறன், ஒரு செயலுக்கான உங்களின் எதிர்த்திறன். Pounce என இது அழைக்கப்படுகிறது.
அடுத்த மூளை விளையாட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து விளையாடும் விளையாட்டு. ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.
இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப்படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.
தரவிறக்க சுட்டி

எடையை குறைக்க அதிகாலையில் விழித்தெழுங்கள்

அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஒல்லியாவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ரோஹாம்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள பேராசிரியர்கள், அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுபவர்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் காலையில் வெகு நேரம் கழித்து எழுபவர்களை விட அதிகாலையில் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் மனதில் உற்சாகத்துடன் காணப்படுவதையும் உணர்ந்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர்.
அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக அதிகாலை 6.58 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 8.54 மணிக்கு பின் எழுபவர்கள். இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக காட்சியளித்தனர். அவர்களிடம் காலையில் வேலையை தொடங்கும் போது காணப்படும் உற்சாகம் வெகு நேரம் நீடித்தது. அதே சமயம், லேட் ஆக எழுபவர்களிடம் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
அதே போல் இரவில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்களே காலையில் தாமதமாக விழிக்கிறார்கள் என்பதும், அவர்களில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஐபோன்களிலும் வலைப்பதிவு​களை மேற்கொள்ளலா​ம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப் பூ(blogger) என்பது இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஒன்லைன் மூலம் மேற்கொள்ளகூடியதாகக் காணப்படும் வலைப்பூ பதிவுகள் இதுவரை காலமும் கணணிகளைப் பயன்படுத்தியே நிர்வகிக்கக்கூடியதாகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது அப்பிள் நிறுவனத்தின் அற்புத தயாரிப்பான ஐபோன்களிலும் வலைப்பூக்களை நிர்வகிக்கக்கூடிய வசதியை தரக்கூடிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது ஐபோன்கள் தவிர்ந்த ஐபொட், ஐபாட் என்பவற்றிலும் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மென்பொருளினைப் பயன்படுத்தி வலையகத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
1. ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பூ கணக்குகளைக் கையாளுதல்.
2. புகைப்படங்களை தரவேற்றம் செய்தல்.
3. லேபல்களை சேர்த்தல்.
4. இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேர்த்தல்.
5. பதிவுகளை பதிவேற்றம் செய்தல் அல்லது தற்காலிகமாக சேமித்துவைத்தல்.
6. பதிவேற்றப்பட்ட அல்லது சேமிக்கப்பட்ட பதிவுகளை காட்டுதல்.
தரவிறக்க சுட்டி

சொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்

உலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது.
மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும்.
இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல.
மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது.
ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.
சொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்
1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.
2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் சருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.
3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.
4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
சொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்
1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.
2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.
3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.
4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.

இதய நோய்களை தடுக்கும் முட்டை: ஒரு ஆப்பிளுக்கு சமம்

முட்டை சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என்ற விவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் உள்ளன.
மேலும் அதில் உள்ள மஞ்சள் கருவியில் டிரைப்டோபோன், டைரோசின் என்ற இரண்டு வித அமினோ அமிலங்கள் உள்ளன. இவை அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
எனவே, முட்டை சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படாது. இந்த தகவலை அல்பெர்பா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு முட்டை சாப்பிட்டால் அது ஒரு ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமமாகும். அந்த அளவுக்கு அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
எனவே தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும். அதை வறுத்தோ, அவிய வைத்தோ சாப்பிடுவது சரியல்ல.
ஏனெனில் அவ்வாறு சாப்பிடும் போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பாதியாக குறைந்து விடும். எனவே அதை மைக்ரோ ஓவனில் பாதி அளவு வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது என்றும் கூறியு

ஆங்கில இலக்கணத்தை கற்றுக் கொள்வதற்கு

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு மிக மிக முக்கியம், ஆங்கில இலக்கணத்தை பிழையில்லாமல் கற்றுக் கொள்வதற்கு ஒரு வழி உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் ஓபன் செய்தால், அதில்
இலக்கணம் என்றால் என்ன? Capital letter, Nouns, Pronouns, Adjectives, Determiners, Verbs and Tenses, Subject -Verb, Adverbs, Prepositions, Conjections, Interjections, Sentences, Punctuation என பதினான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம். மேலும் குழந்தைகள் மிக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படங்களுடன் விரிவான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி

அழகான Wallpaper வேண்டுமா?


கணணிகளைப் பயன்படுத்துபவர்கள் அதனை கவர்ச்சிகரமானதாக வைத்திருப்பதற்கு விரும்புவர், இதற்காக Wallpaper, Themes, Screen Server போன்றவை உதவுகின்றன.
இவற்றில் Wallpaper களினை மாற்றம் செய்வதற்குரிய வசதி அனைத்துவிதமான இயங்குதளங்களிலும் காணப்படுகின்றன. இவற்றினை விட மேலதிகமான மென்பொருட்கள் மூலமும் ஒன்றிற்கு மேற்பட்ட Wallpaper புகைப்படங்களை நிர்வகிக்க முடியும்.
இதற்கென விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இணையதள முகவரி
1. My Daily Wallpaper
2. The John’s Background Switcher
3. Wallpaper Manager

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

உடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிறது. அந்த களைப்பை வேலை செய்யும் நாட்களிலே போக்காமல், வார இறுதியில் போக்குவார்கள்.
இப்படி செய்வதால் உடலில் ஏற்படும் களைப்பானது முற்றிலும் போகாது. களைப்பை போக்க நாம் எந்த ஒரு நேரத்தையும் ஒதுக்க தேவையில்லை, அனைத்தும் நாம் செய்யும் செயலிலேயே இருக்கிறது.
களைப்பை போக்க சில வழிகள்
1. நல்ல ஆழ்ந்த அமைதியான உறக்கம் வேண்டும். ஒரு மனிதன் தினமும் எட்டு மணிநேரம் தூங்கினால், அவன் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆகவே வேலை செய்பவர்கள் களைப்பு போக வேண்டும் என்றால் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. எட்டு மணிநேர தூக்கம் இருந்தாலே போதுமானது.
2. நிறைய பேர் தங்கள் களைப்பு போக வேண்டும் என்று வார இறுதியில் நீண்ட நேரம் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் புத்துணர்ச்சி பெற எட்டு மணிநேர தூக்கத்திற்கு பதில் 10 மணிநேரம் தூங்கினால் களைப்பு போகாது, மேலும் களைப்பு தான் ஏற்படும். ஆகவே அளவான தூக்கமே உடலுக்கு நல்லது.
3. படுக்கும் முன் சிலர் நன்றாக வயிறு நிறைய சோற்றுடன், எண்ணெய் அதிகமாக உள்ள குழம்பு அல்லது மற்ற எண்ணெய் பதார்த்த உணவுகளை உண்டு பின் தூங்குவார்கள். இவ்வாறு உண்டால் எப்படி நிம்மதியான தூக்கம் வந்து, களைப்பு போய் மறுநாள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
ஆகவே அவ்வாறேல்லாம் உண்ணாமல் காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்டு பின் தூங்குங்கள், நன்கு தூக்கம் வந்து மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருப்பர்.
4. வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற பின் களைப்பை போக்க ஒரு கப் சூடான காபி குடிப்போம். ஆனால் அவ்வாறு மாலை நேரத்தில் காபி குடிப்பது நல்லதல்ல. அப்படி குடித்தால் அது தூக்கத்தை பாதிக்கும்.
ஆகவே அந்த நேரத்தில் வேண்டுமென்றால் சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடலாம் அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் இரவில் நன்கு தூக்கம் வரும்.
5. களைப்பு ஏற்பட்டால் அடிக்கடி உடலில் வலி ஏற்படும். அப்போது உடலுக்கு ஏற்ற மசாஜ் எதையாவது செய்யலாம்.
இப்போது தான் மசாஜ் செய்வதற்கென்றே ஆங்காங்கு மசாஜ் நிலையங்கள் உள்ளனவே. இவ்வாறு மசாஜ் செய்தால் அப்போது வரும் தூக்கத்திற்கு அளவே இல்லை.

Yeahbit PC SpeedUp 2.1.6: கணணியின் வேகத்தை அதிகரிக்க செய்யும் மென்பொருள்

அன்றாட செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் கணணிகள் சில சமயங்களில் வேகம் குறைவடைவதனால் சலிப்பை உண்டாக்கும்.
இதற்கு வன்பொருள் பாகங்களும் காரணியாக அமைவதுடன், சில மென்பொருள் கோப்புக்களும் காரணமாகின்றன.
இவ்வாறு கணணியின் வேகத்தில் தாக்கத்தை செலுத்தும் அநாவசியமான கோப்புக்களை நீக்கி மீண்டும் கணணியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதற்கு Yeahbit PC SpeedUp மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் registry cleaning, spyware killing, repair ,privacy protection, disk cleaning, speeding up, optimize system போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

Skype 4.0 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்களுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு, Skype 4.0 என்ற புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும், இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றும் தகவல்கள் வெளியானது. இதற்கு ஏற்றாற் போல் எந்த வித புதிய தொகுப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் லினக்ஸ் பயனாளர்களுக்காக புதிய மாற்றங்களுடன் Skype 4.0 என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
புதிய அம்சங்கள்:
New Conversations View.
New Call View.
Better call quality.
Improved Video call quality.
Improved chat synchronization.
New presence and emoticon icons.
Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய பதிப்பை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.
தரவிறக்க சுட்டி

உங்களது புகைப்படங்களை விரும்பிய அளவு சுருக்குவதற்கு

உங்களது அழகிய புகைப்படங்களை தேவையான அளவில் சுருக்குவதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
பேஸ்புக்கில் பதிவேற்றவோ அல்லது வேறு இணைய சேவைகளுக்காகவோ புகைப்படத்தின் அளவை சுருக்கவோ மாற்றவோ வேண்டியிருக்கும்.
இதற்கு உதவும் வகையில் தான் கிராப்.மீ என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த புகைப்படத்தையும் இந்த தளத்தின் மூலம் போட்டோஷாப் உதவி இல்லாமலே சுருக்கி கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் சுலபம். அளவை மாற்ற வேண்டிய புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றி விட்டு, ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும், படத்தை விரும்பிய அளவில் மாற்றித்தந்து விடுகிறது.
பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படும் அளவுகள் இந்த தளத்திலேயே பரிந்துரைக்கப்படுகிறது. அவை போதும் என்றால் அவற்றில் இருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.
இல்லை என்றால் தேவையான அளவை குறிப்பிட்டு அதற்கேற்ற புகைப்படத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரே படத்தில் பல அளவுகளையும் பெறும் வசதி இருக்கிறது.
எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யாமலேயே இதனை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இணையதள முகவரி

AVI ReComp மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்வதற்கு

வீடியோக் கோப்பு வகைகளுள் ஒன்றான AVI இனை வேறு கோப்பு வடிவங்களுக்கு மாற்றுவதற்கும் அவற்றின் தரம், அளவு என்பனவற்றை மாற்றுவதற்கும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் AVI ReComp மென்பொருளானது முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் மிகுந்த வினைத்திறனான மென்பொருளாகவும் காணப்படுகின்றது. அதாவது வீடியோ ஒன்றின் அளவினை அதன் தரம் குறைவடையாது மாற்றவல்லது.
மேலும் 28.6MB அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் ஒரே நேரத்தில் பல AVI கோப்புக்களை பயன்படுத்தி அவற்றின் அளவு, கோப்பு மாற்றம் என்பவற்றை செயற்படுத்த முடியும்.
இதன் மூலம் AVI வீடியோக் கோப்பினை mp3, wav, ac3, dts, ogg ஆகிய ஓடியோ கோப்புக்களாகவும் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி

பலாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.
இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது, மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.
1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.
4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
ஆகவே இந்த அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது.
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும், இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது.
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காய்ச்சல் வருவது போல் உணர்ந்தால் உடனே ஒரு வாழைப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.

நினைவுத் திறனை அதிகரிக்கும் பாசிப்பயறு

பாசிப்பயறில் அதிகளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.
குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

எளிய மருத்துவ குறிப்புகள்

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிரீன் டீ ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும்.
முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
கருவாடு, அதிக உப்பு ஊறுகாய், அப்பளம் போன்றவை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்.
சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.
வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.

தடை செய்யப்பட்ட இணையதளத்தை பார்வையிடுவதற்கு


[ சனிக்கிழமை, 16 யூன் 2012, 02:13.22 மு.ப GMT ]
முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்ப்பதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது.அன் டைனி என்கின்ற தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டுவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்கின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.
இணையதள முகவரி

BDLot Blu-ray Ripper: குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்கு

Blue Ray குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதற்காக BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவி புரிகிறது.
Blue Ray குறுவட்டுக்கள் சேதமடைந்து இருந்தால் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சாதாரணமாக Blue Ray குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க இயலாது. அதற்கென உரிய மென்பொருளை கொண்டு மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதற்காக BDLot Blu-ray Ripper என்ற மென்பொருள் பயன்படுகிறது.
மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும், அதை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீ BV-VSEYEDJJ-QQMRIP இதை பயன்படுத்தி நிறுவிக் கொள்ளவும்.
சீடியினை உள்ளிட்டு பின் வெளியீட்டு பகுதியினை குறிப்பிட்டு பின் RUN என்னும் பொத்தானை அழுத்தி மீட்டெடுத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருள் 5 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும்.
தரவிறக்க சுட்டி

வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

கணணி பயனாளர்கள் அனைவருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயர்(VLC Media Player) பற்றி அறிந்திருப்பர். எளிமையான இந்த மென்பொருள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது.
தற்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.
இதற்கு முதலில் புதிய பதிப்பான VLC 2.0வை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும்.
அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 போர்மட்டில் My Documents->My Videos கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விட VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.
தரவிறக்க சுட்டி

சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றுவதற்கு

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம்.
ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றிலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு

நீங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஓடியோவை மட்டும் தனியாக கோப்புகளாக பிரித்தெடுக்கலாம்.
இதற்கு Helium Audio Splitter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்தி ஓடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற போர்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது.
இந்த மென்பொருள் விண்டோஸ், விண்டோஸ் 2000, விஸ்டோ இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.
தரவிறக்க சுட்டி